Comments

உலக செய்தி

வரலாற்றை மீட்டும் ஷீஆக்கள் - அழிக்கப்படும் முஸ்லிம்கள்...


Pictureஉலக வரலாற்றில் முஸ்லிம்களுக்குள் இருந்துகொண்டு தங்களை முஸ்லிம்களாகவும் முஸ்லிம்களுக்காகப் போராடுபவர்களாகவும் காட்டிக்கொண்டு வேலை செய்து அதிகமான முஸ்லிம்களைக் கொன்றொழித்த கூட்டமாக ஷீஆக்கள்தான் காணப்படுகிறார்கள். இஸ்லாத்திற்கு முரணான பல குழுக்கள் இருந்த போதிலும் எல்லாவற்றையும் விட முஸ்லிம்களை முழுமையாக இவ்வுலகிலிருந்த துடைத்தெறிவதற்கான திட்டங்களுடன் செயற்படுபவர்கள் இந்த ஷீஆக்கள் மாத்திரம்தான். வல்லரசு நாடுகளுக்கு எதிரானவர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு ரகசியமான ஒப்பந்தங்களுடன் பலமான உறவுகளை இவர்கள் பேணுவதை இஸ்லாமிய அறிஞர்கள் வரலாற்று நெடுகிலும் எமக்கு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

அந்த வகையில் ஈராக், ஸிரியா போன்ற பிரதேசங்களை அழித்த முக்கியமான போர்தான் தாத்தாரியர்களின் படையெடுப்பு. இந்தப் போரில் எத்தனைபேர் உயிரிழந்தார்கள் என்று கணக்கிடமுடியாது. ஏனெனில் அங்கு அவ்வாறு கணக்கெடுப்பதற்கு யாரும் மீதமிருக்கவில்லை என்று சொல்லலாம். பல மாதங்களாக பட்டினியால் மக்கள் அழிந்தார்கள், மரணித்தவர்களின் சடலங்களைப் புதைக்க யாரும் இல்லை அதனால் இப்பிரதேசங்களை அண்டிய நாடுகளில் வளி மாசுபட்டதன் காரணமாக தொற்றுநோய் பரவியது, இங்கிருந்த எதுவும் மிச்சமிருக்கவில்லை என்று சொல்லுமளவுக்கு எல்லாமே அழிக்கப்பட்டது.

இவ்வளவு வேலையையும் தாத்தாரியர்களுடன் சேர்ந்து உள்ளிருந்து திட்டமிட்டவர்கள் அல்கமா, நஸீருத்தீன் எனும் இரண்டு ஷீஆக்கள்தான். இவர்கள் அப்பாஸிய ஆட்சியின் இறுதி கலீபாவான முஸ்தஃஸிமி பில்லாஹ்வின் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு போன்ற முக்கியமான பதவிகளை வகித்தார்கள். இறுதியில் கலீபாவையும் கொலைசெய்து அப்பாஸிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் தாத்தாரியர்களின் ஆட்சியில் முக்கிய பதவிகளையும் பெற்றுக்கொண்டார்கள்.

முஸ்லிம்கள் காலாகாலத்திற்கும் மறக்காமல் கவலைப்படும் இந்த வேலையினை செய்தவர்களைப் புகழ்ந்துதான் குமைனி ஈரானின் ஆட்சிக்கு வந்தார். குமைனியின் இஸ்லாமி அரசு என்ற புத்தகத்திலும் அவரது ஏனைய பேச்சுக்களிலும் இவர்களைப் புகழ்ந்துள்ளதுடன் இவர்களைப்போன்று செயற்பட வேண்டும் என்றும் ஷீஆக்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

அவரின் மாணவர்களான ஷீஆக்கள் தற்போது ஸிரியாவையும் ஈராக்கையும் மீண்டுமொரு அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஸிரியாவில் 21ஆம் நூற்றாண்டின் புதிய சோமாலிய தேசம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐ.நா. சபை, அவிழ்த்துப்போடுவோர் சபை என்று உலகத்தை உற்றுப் பார்ப்பதாகச் சொல்லும் சபைகளெல்லாம் மௌனம் காக்க, ஈரானும் அதன் கூலிப்படையான ஹிஸ்புல்லாவும் ஏனைய படைப்பிரிவுகளும் சேர்ந்து ஸிரியாவில் அஹ்லுஸ்ஸுன்னாக்கள் நிறைந்து வாழும் மதாயா நகரினை கடந்த ஆறு மாதங்களாக முற்றுகையிட்டுள்ளனர். இங்கு சுமார் 40,000பேர் வரை வாழ்கிறார்கள். இவர்களுக்கு வெளியிலிருந்து எதுவும் சென்று விடாத அடிப்படையில் முற்றுகையிடப்பட்டிருப்பதுடன், உள்ளிருப்பவர்கள் வெளியில் வராத வகையில் கிராமங்களை சுற்றிலும் மிதி வெடிகளை ஷீஆக்கள் புதைத்துள்ளனர். பசி தாங்க முடியாமல் வெளியில் வருவோர் மிதிவெடிகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

பல நாட்களாக நீடிக்கும் இந்த முற்றுகையால் சிரியாவில் அஹ்லுஸ்ஸுன்னாக்கள் நிறைந்து வாழும் பெரும் பகுதிகள் உணவு, மருத்துவம் இன்றி தவிக்கின்றனர். பிறந்த குழந்தைகள் பல மாதங்களாக அருந்துவதற்கு பால் இல்லாமல் உப்புக் கரைசலை அருந்திக்கொண்டிருக்கிறது. பலர் மரத்தின் இலைகளையும், புற்களையும் அவித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள அனைவரும் போசாக்கின்மை காரணமாக பல நோய்களுக்கு உள்ளாகி உள்ளதுடன், நாளுக்கு நாள் இவர்களின் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை உலகம் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. 

அராஜக ஷீஆக்களின் இனஅழிப்பு முற்றுகை காரணமாக எமது முஸ்லிம் உறவுகள் பட்டினிச் சாவினை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே, பாதுகாப்பாக வீடுகளிலும் மாளிகைகளிலும் வாழும் நாம் அம்மக்களுக்காக அல்லாஹ்விடம் இருகரம் ஏந்துவோம். ஷீஆக்களின் அழிவுக்காகவும் அஹ்லுஸ்ஸுன்னாக்களின் பாதுகாப்புக்காகவும் பிறார்த்திப்போம்.

யா அல்லாஹ்! எமது சகோதரர்களைப் பாதுகாப்பாயாக.
 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.